ஹஜ் பயணிகளுக்கு சேவை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

2026-ம் ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்புவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் (ஆன்லைன்) மூலம் வரவேற்கப்படுகின்றன.

ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் அலுவலர்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய/மாநில அரசின் கீழ் செயல்படும் பொது நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் சுமார் இரண்டு மாதங்கள் (13.04.2026 முதல் 05.07.2026 வரை) ஆகும். இந்த காலம் பணிக்காலமாக கருதப்படும்.

விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறைகள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை மும்பை இந்திய ஹஜ் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆகையால், விருப்பமுள்ள நபர்கள் நாளை (திங்கட்கிழமை) இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இத்தகவலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.